யானைகளின் வழித்தடங்கள் சிதைக்கப்படுவதால், காட்டு யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் வாழும் இடங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் இதே நிலைதான் இப்போது நிலவி வருகிறது.
சொல்லப்போனால், இப்போதைய நேரத்தில் மக்களும் வனத்துறையினரும் காட்டு யானைகளை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காகவே பல மணி நேரத்தைச் செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் யானைகளைத் தெருநாய்கள் விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பதி மலைப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் : பக்தர்கள் அதிர்ச்சி
கோவை மாவட்டம் துடியலூர் அருகே கண்வாய் குடியிருப்பு பகுதியில் 3 காட்டு யானைகள் நேற்று இரவு புகுந்தது. எங்கிருக்கிறோம் எனத் தெரியாமல், தெரு தெருவாய் யானைகள் சுற்றி திரிந்துள்ளது.
யானைகளைப் பார்த்த அப்பகுதி தெருநாய்கள் பயந்து ஓடி ஒழிந்து கொண்டுள்ளன. ஒழிந்துக் கொண்ட தெருநாய்களுக்கிடையே 2 நாய்கள் மட்டும், யானைகளை விரட்ட தொடங்கியது. தொடர்ந்து அவை யானைகளை விடாமல் விரட்டும் நோக்கில் பின்னால் குரைத்துக் கொண்டே சென்றது.
யானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மருத்துவர்கள்!!
தொடர்ந்து நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்ததால் கோபமடைந்த ஒரு யானை, அந்த நாய்களை விரட்டியது. இதற்கிடையே, யானைகள் ஊருக்குள் புகுந்த விவகாரம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் யானைகள் இருந்த இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். வனத்துறையினர் வழக்கம்போல், பட்டாசுகளைக் கொண்டு யானைகளை வனத்திற்குள் அனுப்பும் முயற்சியை மேற்கொண்டனர்.
சொல்லப்போனால், இப்போதைய நேரத்தில் மக்களும் வனத்துறையினரும் காட்டு யானைகளை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காகவே பல மணி நேரத்தைச் செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் யானைகளைத் தெருநாய்கள் விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பதி மலைப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் : பக்தர்கள் அதிர்ச்சி
கோவை மாவட்டம் துடியலூர் அருகே கண்வாய் குடியிருப்பு பகுதியில் 3 காட்டு யானைகள் நேற்று இரவு புகுந்தது. எங்கிருக்கிறோம் எனத் தெரியாமல், தெரு தெருவாய் யானைகள் சுற்றி திரிந்துள்ளது.
யானைகளைப் பார்த்த அப்பகுதி தெருநாய்கள் பயந்து ஓடி ஒழிந்து கொண்டுள்ளன. ஒழிந்துக் கொண்ட தெருநாய்களுக்கிடையே 2 நாய்கள் மட்டும், யானைகளை விரட்ட தொடங்கியது. தொடர்ந்து அவை யானைகளை விடாமல் விரட்டும் நோக்கில் பின்னால் குரைத்துக் கொண்டே சென்றது.
யானைக்கு செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கும் ஜப்பானிய மருத்துவர்கள்!!
தொடர்ந்து நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்ததால் கோபமடைந்த ஒரு யானை, அந்த நாய்களை விரட்டியது. இதற்கிடையே, யானைகள் ஊருக்குள் புகுந்த விவகாரம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் யானைகள் இருந்த இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். வனத்துறையினர் வழக்கம்போல், பட்டாசுகளைக் கொண்டு யானைகளை வனத்திற்குள் அனுப்பும் முயற்சியை மேற்கொண்டனர்.