கோவை: கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடக்கும் மஹா சிவராத்திரி விழாவுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 11ஆம் தேதி துவங்கியது. தினமும் மாலை இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மஹா சிவராத்திரியான இன்று இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆதியோகி பிரதட்சணம் நடைபெறுகிறது.
ஈஷா யோகா மைய நிறுவனர் சற்குருவின் சொற்பொழிவு இன்று நடக்கிறது. இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து பூண்டி வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிவராத்திரி விழா வெள்ளிக்கிரி மலை மற்றும் அடிவாரத்தில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது.
ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 11ஆம் தேதி துவங்கியது. தினமும் மாலை இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மஹா சிவராத்திரியான இன்று இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆதியோகி பிரதட்சணம் நடைபெறுகிறது.
ஈஷா யோகா மைய நிறுவனர் சற்குருவின் சொற்பொழிவு இன்று நடக்கிறது. இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து பூண்டி வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிவராத்திரி விழா வெள்ளிக்கிரி மலை மற்றும் அடிவாரத்தில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது.