ஆப்நகரம்

கோவையில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 3 Jan 2017, 8:39 pm
கோவையில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil coimbatore man gets life term for murder of pregnant wife
கோவையில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை


அங்குள்ள ஆவரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன் பிரசாத் (31). மெக்கானிக் என்ஜீனியரான இவர், மாரியம்மாள் என்கிற சிந்து பிரியாவை (25) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். எனினும், சிந்து பிரியா, மாற்று சாதிப் பெண் ஆவார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

அத்துடன், நவீன் பிரசாத், சிந்து பிரியாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, நவீனுக்கும், கர்ப்பம் தரித்திருந்த சிந்துவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சிந்து, தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னாலேயே சென்ற நவீன், சிறிது நேரம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, சிந்துவை வலுக்கட்டாயமாக, தனியே அழைத்துள்ளார். அப்போது வெளியே வந்த சிந்துவை, சுத்தியலால் கொடூரமாகத் தாக்கி, கொன்றுவிட்டு தப்பியோடினார்.

ரேஸ் கோர்ஸ் அருகே ஓடிய நவீன், சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக, பொதுமக்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில், நவீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

A court in Coimbatore on Tuesday sentenced a 31-year-old man to life imprisonment for murdering his pregnant wife after a drunken brawl in 2014.

அடுத்த செய்தி