ஆப்நகரம்

கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 6 May 2017, 10:33 am
கோவை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil coimbatore medical college students protest against neet exam
கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா


நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Coimbatore medical college students protest against NEET exam

அடுத்த செய்தி