ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Aug 2018, 2:15 pm
தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil images.
கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு


வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை 3 செ.மீட்டர், சின்னக்கல்லார், ஏற்காடு மற்றும் நடுவட்டத்தில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் சேலம்,உதகை மற்றும் கடலூரில் தலா 1செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி