ஆப்நகரம்

தனியார் பேருந்தின் அசத்தல் சேவை: பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்

கோவையில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது

Samayam Tamil 5 Oct 2018, 4:01 pm
கோவை தனியார் பஸ் நிறுவனம், பெற்றோ் இல்லாத மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை செய்யும் சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Samayam Tamil coimbatore vijay transport


பொதுவாக தனியார் பேருந்து என்றால் எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள். பயணிகள் கூட்டம் ஏறுவதற்காக நீண்ட நேரமாக ஒரே ஸ்டாப்பில் நிற்பார்கள். பேருந்து முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்த பிறகு தான் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், கோவையில் விஜய் டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனம் இதற்கு நேர்மாறாக உள்ளது.

ஒண்டிப்பதூர் – வடவள்ளி, மணியகாரம்பாளையம், காந்திபார்க் என்று பல்வேறு இடங்களில் இயங்குகிறது விஜய் டிரான்ஸ்போர்ட் பேருந்துகள். அடிப்படை லாபம் போக ஏதாவது நற்பணிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கிலே பல சலுகைகள் செயல்படுத்தி வருகிறது. அதன் துவக்கமாக, பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பேருந்து பயணம் மேற்கொள்ளும் வசதி செய்து கொடுக்கிறது. பள்ளி அடையாள அட்டை, பஸ்பாஸ் ஏதேனும் நடத்துனரிடம் காட்டினால் மாணவர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

இதே போல், பெற்றோர்கள் இல்லாத மாணவர்களுக்கு பேருந்தில் இலவமாக பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக மாணவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். மாணவர்கள் அவர்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிதம் ஒன்றை பெற்று வர வேண்டும். அந்த கடித்தை நடத்துனரிடம் காட்டினால், அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தனியார் பேருந்தின் இந்த நற்செயல் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி