ஆப்நகரம்

கோவை: ஏடிஎம் கார்டே இல்லாத பெண்ணிடம் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம்மில் எடுத்ததாக கூறிய வங்கி

கோவையில் ஏடிஎம் கார்டே இல்லாத பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 4.31 லட்சம் ரூபாய் மோசடி நடந்த சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2018, 2:16 pm
கோவையில் ஏடிஎம் கார்டே இல்லாத பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 4.31 லட்சம் ரூபாய் மோசடி நடந்த சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil covai atm fraud


கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் உசேன் பீபி. இவர் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து அதில் பணம் போட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் பீபி வங்கிக்கு சென்ற போது, அவரது கணக்கில் இருந்த 4.31 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டு விட்டதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். தன்னுடைய கையொப்பம் இல்லாமல் எப்படி பணம் எடுக்க முடியும் என்று பீபி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வங்கி ஊழியர்கள், வங்கி கணக்கின் பணப்பரிமாற்ற தகவல்களை பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து வங்கிக்கு சென்று பீபி கேட்டுள்ளார். அப்போது, பீபியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பீபி, தன்னிடம் தான் ஏடிஎம் கார்டே இல்லையே, பின் எப்படி ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் எடுக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
ஏதேனும் மோசடி கும்பல் போலியான ஏடிஎம் கார்டுகளை தயாரித்து இந்த பணம் எடுத்திருக்கலாம் என்ற வங்கி ஊழியர்கள், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், ஒரு மாதம் காலம் ஆகியும் வங்கி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விரக்தியடைந்த பீபி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் நடந்த விபரங்களை கூறிய பீபி, வங்கி ஊழியர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பாக கூறியுள்ளார். மேலும், அண்மையில் கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் புரோக்கர் ஒருவரிடம் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது வங்கி அட்டையை கொடுத்தாகவும், எனவே அவர் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறிய பீபி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி