ஆப்நகரம்

முழு கொள்ளளவில் 82 சதவீதம் எட்டிய தென்னிந்திய நீர் நிலைகள்!

தென்னிந்தியாவின் நீர் நிலைகள் தங்கள் முழு கொள்ளளவின் 82 சதவீதம் நிரம்பியுள்ளதாக மத்திய நீர் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Sep 2018, 10:13 pm
சென்னை: தென்னிந்தியாவின் நீர் நிலைகள் தங்கள் முழு கொள்ளளவின் 82 சதவீதம் நிரம்பியுள்ளதாக மத்திய நீர் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 6


மத்திய நீர் ஆணையத்தின் கண்கானிப்பில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ் நாட்டு என 5 மாநிலங்களில் மொத்தம் 31 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் மொத்தமாக நேரடியாக 51.59 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் சேமிக்கலாம்.

மத்திய நீர் வள அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி தற்போது 42.53 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது மொத்த அளவில் 82 சதவீதமாகும். இது கடந்த ஆண்டில் இருந்த நீரின் அளவை விட கூடுதலாகும். தவிர, கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக இருந்த நீரின் அளவைவிட கூடுதல் என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நீர் வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டில், தென்னிந்தியாவின் நீர் நிலைகளில் இருந்த நீரின் அளவு 38 சதவீதம் தான். தவிர, கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீரின் அளவு 62 சதவீதம் தான். ‘ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி