ஆப்நகரம்

நிரம்பி வழியும் அணைகள்... இவ்வளவு தண்ணீரா? ஆச்சர்யத்தில் நீர்வளத்துறை!

தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள அணைப்பகுதிகளில், அதிக அளவு நீர் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 20 Jul 2018, 12:14 am
சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள அணைப்பகுதிகளில், அதிக அளவு நீர் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil நிரம்பி வழியும் அணைகள்... இவ்வளவு தண்ணீரா? ஆச்சர்யத்தில் நீர்வளத்துறை!
நிரம்பி வழியும் அணைகள்... இவ்வளவு தண்ணீரா? ஆச்சர்யத்தில் நீர்வளத்துறை!


கடந்த சில வாரங்களுக்கு முன் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள அணைகளிலும் தண்ணீர் நிரம்பியது.

இந்நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள முக்கிய அணைகளின் மொத்த கொள்ளளவு 32% அதிகமாக நிரம்பியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தென்னிந்தியாவில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 31 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 51.59 BCM எனவும், அதில் 48% அளவிற்கு நிரம்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்போது, 24.52 BCM மட்டுமே மீதமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நீர்த் தேக்கங்களில் வெறும் 16% மட்டுமே நீர் இருந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 28% நீர் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி