ஆப்நகரம்

போலீசுக்கு பயந்து வேகமா பைக் ஓட்டிய கல்லூரி மாணவன் பலி!

சென்னையில் போலீசாருக்கு பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 23 Dec 2016, 12:05 am
சென்னை : சென்னையில் போலீசாருக்கு பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil college boy died driving bike over speed while police chase him
போலீசுக்கு பயந்து வேகமா பைக் ஓட்டிய கல்லூரி மாணவன் பலி!


சென்னையின் நம்மாழ்வார் பேட்டையின் சுப்புராயன் தெருவில், சலூன் கடை நடத்தி வரும் நீல கிருஷ்ணனின் 2வது மகன் முகிலன். மீனாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரில் பி.ஏ., படித்து வந்தார். இவர், அதிகாலை 2 மணிக்கு அவரது நண்பர்கள் சந்தோஷ் (25), கிஷோர் (21) ஆகியோருடன் தெருவில் பேசி கொண்டிருந்தனர்.
அருகில் உள்ள டீ கடையில் டீ குடிக்க, தனது நண்பர்களுடன் சென்றுள்ளனர்.

பைக்கை முகிலன் ஓட்டியுள்ளார். கிஷோரும், சந்தோஷும் பின்னால் உட்கார்ந்திருந்தனர். கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் புருஷோத்தமன், சிவா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முகிலனிடம் லைசென்ஸ் இல்லாததால், தவிர ஹெல்மெட் அணியாததால் பயந்து முகிலன் பைக்கை திருப்பியுள்ளார். கிஷோர், சந்தோஷ் பைக்கை விட்டு இறங்கி தப்பி ஓடினர்.

முகிலன் போலீசாரிடம் சிக்க கூடாது என வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார். அதில், ஆம்ஸ் சாலையின் ஸ்பீட் பிரேக்கரில் வேகமாக ஏறியதில், நிலை தடுமாறி தலைக்குப்புற விழுந்தார். இந்த விபத்தில் தலையில் அடிப்பட்டு முகிலன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தப்பிச்சென்ற அவரின் நண்பர்களான கிஷோர், சந்தோஷ் இருவரும் முகிலனை தேடி மீண்டும் அந்த இடத்துக்கு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த முகிலனை தூக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகிலன் உயிரிழந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி