ஆப்நகரம்

கல்லூரி மாணவி கொலை! அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது

கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 23 Sep 2016, 4:42 am
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி தீபிகா. இவரது மகள் தீபிகா (19) பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறாள். தாயின் பராமரிப்பில் இருக்கும் தீபிகா கடந்த 19ம் தேதி இரவு 7 மணிக்கு போன் வந்துள்ளது. அதில் பேசியபடியே வெளியில் சென்றவள் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மறுநாள் காலையில் அப்பகுதியில் இருக்கும் வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக தீபிகாவிற்கு வந்த அழைப்பை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த அரசன் (21) போலிசில் சரண் அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலையில், எம்.பி.ஏ.படித்து வரும் நான், இதற்கு முன்பாக பூம்புகார் கல்லூரியில் தீபிகாவுடன் படித்தேன். அப்போதே அவருடன் காதலில் விழுந்தேன்.
Samayam Tamil college girl murdered annamalai university boys arrested
கல்லூரி மாணவி கொலை! அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது


இந்நிலையில், தீபிகாவுக்கும், அதே ஊரைச்சேர்ந்த உறவினர் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. என்னை காதலித்தவள் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். இதன் காரணமாக ராஜமோகன் என்ற நண்பனை அழைத்துக்கொண்டு அப்பராஜபுரம் சென்றேன். அப்போது தீபிகாவுக்கு போன் செய்து உனக்கு கிப்ட் வாங்கி வந்திருக்கிறேன். இப்போவே கொடுக்க வேண்டும். வாய்க்கால் அருகே வா என்று கூறியுள்ளார்.

தயங்கியபடி வந்த தீபிகாவை அருகில் இருந்த கட்டையால் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்து விட்டாள். உடனே நான் அங்கிருந்து ஓடி விட்டேன் அதன் பிறகு போலீசில் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார். அரசன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி