ஆப்நகரம்

சிறுநீரகங்களை இழந்து உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி!

இரண்டு சிறுநீரகங்களை இழந்து உயிருக்கு போராடும் பெரம்பலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு தமிழக அரசு உடனே சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 24 Mar 2018, 9:50 am
இரண்டு சிறுநீரகங்களை இழந்து உயிருக்கு போராடும் பெரம்பலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு தமிழக அரசு உடனே சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Samayam Tamil lavanya


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் – கம்சலா தம்பதியினரின் மகள் லாவண்யா (18). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, லாவண்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டு சிறுநீரகமே செயலிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தனது மகளைக் காப்பாற்ற சண்முகம், தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு பலனில்லாமல் போய்விட்டது. ஏனென்றால், அந்த சிறுநீரகமும் பொருத்திய ஒரு வாரத்திற்குள் செயலிழந்துவிட்டது. இதையடுத்து, மீண்டும் லாவண்யாவிற்கு சிறுநீரகம் கிடைக்க ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அதுவரை அவருக்கு டயாலிஸில் செய்ய வசதியில்லை என்று லாவண்யாவின் குடும்பத்தினர் கதறுகின்றனர். இதையடுத்து, லாவண்யாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்து உடனடியாக சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி