ஆப்நகரம்

ரயில் நிலையத்தில் அரிவாளுடன் சுற்றிய 4 மாணவர்கள் கைது!

இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் வீச்சரிவாளுடன் சுற்றியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

TNN 10 Oct 2017, 10:35 am
சென்னை: இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் வீச்சரிவாளுடன் சுற்றியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
Samayam Tamil college students arrested for carrying weapons at hindu college railway station
ரயில் நிலையத்தில் அரிவாளுடன் சுற்றிய 4 மாணவர்கள் கைது!


கடந்த ஆயுத பூஜையன்று நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் மாணவர்கள் சிலர் கையில் அரிவாளுடன் ரயிலில் பயணம் செய்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் இதேபோல் கையில் வீச்சரிவாளுடன் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தனர். இதைப் பாரத்த பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், மாணவர்கள் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் அருந்ததிபாளையத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 19), திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் 17 வயது மாணவர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில மாணவர்களை பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சில மாணவர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

College Students arrested for carrying weapons at Hindu College Railway station.

அடுத்த செய்தி