ஆப்நகரம்

வெட்டுக்கத்தியால் கேக் வெட்டி அதிர்ச்சியூட்டிய திருச்சி கல்லூரி மாணவர்கள்!

கல்லூரி மாணவர்கள் வெட்டுக் கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Apr 2019, 9:59 pm
இன்றைய இளைஞர்கள் விபரீத செயல்களைச் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அவர்களின் வருங்காலம் குறித்து பல்வேறு அச்சமூட்டும் கேள்விகளை எழுப்புகிறது.
Samayam Tamil Trichy Cake Cutting


இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நெல்சன் சாலையில் 25 கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வு, தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 30 வினாடிகள் ஓடும் வீடியோவில், பெரிய கேக் ஒன்று ஸ்கூட்டர் சீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதில் “Royal II M Com" என்று எழுதப்பட்டுள்ளது.

அப்போது வெட்டுக்கத்தி கொண்டு இரு மாணவர்கள் கேக்கை வெட்டுகின்றனர். இதனை சிலர் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கல்லூரியின் பேரவல் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாரிடம் கேட்கும் போது, தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை. ஆனால் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினர்.

அடுத்த செய்தி