ஆப்நகரம்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்!

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவதை கண்டித்து கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் மற்றம் பூம்புகார் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TOI Contributor 10 Jul 2017, 4:35 pm
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவதை கண்டித்து கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் மற்றம் பூம்புகார் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil college students from namakkal and sirkazhi supports kathiramangalam protest
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்!


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குமாரமங்களம் பேருந்து நிலையத்தில் கூடிய கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதே போல் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கைகளில் பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து குத்தாலம் பகுதியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடியுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அடுத்த செய்தி