ஆப்நகரம்

சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்- ஆணையர் பாராட்டு

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 74 ஆயிரம் பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Samayam Tamil 13 Aug 2018, 2:58 pm
சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 74 ஆயிரம் பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Samayam Tamil auto-driver-viswanathatn
ஆட்டோ ஓட்டுநருக்கு ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு


சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகேஷ்குமார், தி. நகர் பேருந்து நிலையத்திற்கு சென்ற போது அங்கு தனது பணப் பையை தவறவிட்டுவிட்டார்.

இந்நிலையில் பணத்தை கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர் அருண், அதை மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், ஆட்டோ ஓட்டுநர் அருணை நேரில் அழைத்து அவருக்கு பாராட்டுதல் தெரிவித்து வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.

தவிர, சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கைப்பேசியை பறித்த குற்றவாளியை மோட்டார் சைக்கிளில் விரட்டி பிடித்த காவலர் என். ஆறுமுகத்தையும், திமுக தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றி காவலர் டி. கணேசன் ஆகியோரையும் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பராட்டி வெகுமதி அளித்தார்.

அடுத்த செய்தி