ஆப்நகரம்

பணத்தால் மக்கள் தோற்கடிக்கப்பட்டனர்; பேராபத்தில் ஜனநாயகம்; ஆர்.நல்லக்கண்ணு!

ஜனநாயகம் பேராபத்தில் இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

TNN 8 Jan 2018, 1:15 am
திருப்பூர்: ஜனநாயகம் பேராபத்தில் இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil communist leader nallakannu speech in tiruppur meeting
பணத்தால் மக்கள் தோற்கடிக்கப்பட்டனர்; பேராபத்தில் ஜனநாயகம்; ஆர்.நல்லக்கண்ணு!


திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பங்கேற்றார்.

மாநாட்டில் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்களின் உழைப்பால் சேர்த்த ரூ.7,000 கோடியை அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. அன்றைக்கு விவசாயமும், கைத்தறியும் மட்டுமே தொழில்களாக இருந்தன. உணவுக்கு விவசாயம் என்றும், உடைக்கு கைத்தறி என்றும்தான் இருந்தது.

இன்றைக்கு பணம் கொடுப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

பணம் வெற்றி பெற்று மக்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழல், லஞ்சம் போன்றவற்றால் ஜனநாயகம் பேராபத்தில்தான் முடியும் என்று கூறினார்.

Communist leader Nallakannu speech in Tiruppur meeting.

அடுத்த செய்தி