ஆப்நகரம்

அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டிங்களா? நேரத்தை குறைத்த தமிழக அரசு!

கொரோனாவுக்கு மத சாயம் பூசபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Samayam Tamil 4 Apr 2020, 7:31 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. அதற்கான அறிவிப்பில் தெரிவித்திருப்பது; '' மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 2.30 வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டிங்களா


இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மதம் சார்ந்த கூட்டங்களை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தொடர்பாக எந்த மத சாயமும் பூசக்கூடாது எனவும், அப்படியான வந்தந்திகளை பரப்பினால் கண்டிப்பாக தண்டிக்க படுவீர்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 பேர் பலி..! இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா... !

சமீப நாட்களாக டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கொரோனாவுடன் தொடர்புபடுத்தி சில செய்திகள் சமூக ஊடகங்களில் வளம் வருகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் ஆளாகும் இஸ்லாம் அமைப்பினர் அவ்வப்போது அந்ததந்த மாவட்ட ஆட்சியாளர்களை அணுகி கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக வந்தது பரப்பி தமிழகத்தில் சிலர் கைதாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி