ஆப்நகரம்

இதென்னடா கோ-ஆப்டெக்ஸுக்கு வந்த சோதனை? இப்படியொரு நஷ்டத்திற்கு யார் காரணம்...!

பெரும் நஷ்டம் காரணமாக, கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூடப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2019, 12:24 pm
தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் சலுகை விலையில், ஜவுளிகள் அறிமுகம் செய்யப்படும்.
Samayam Tamil Co-Optex


இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அப்படியென்ன சலுகைகள் இருக்கு? தமிழகத்தில் 23வது மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்த முதல்வர்!

* கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படவில்லை.

* வியாபாரத்தை பெருக்கும் வகையில் போதிய விளம்பரம் செய்யப்படவில்லை.

* ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய முயற்சி எடுக்கவில்லை.

இதற்கு நான் ஆசையெல்லாம் படவில்லை- அமைச்சர் தங்கமணி

இதன் காரணமாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் 18 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கு நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதனை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கிளைகளை மூடும் வேலையில் ஈடுபடுவதாக நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

முதல்வர் கொடுத்த ஷாக்கில் மக்களவையில் அடக்கி வாசிக்கும் பன்னீர் மகன்!!

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறுகையில், நவீன மயமாக்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான லாபத்தை எடுக்காமல் மூடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தொடங்கப்பட்ட டெல்லி, பெங்களூரு விற்பனை நிலையங்கள் திடீரென மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி