ஆப்நகரம்

டுவிட்டரில் மட்டும் வீரத்தை காட்டும் சு.சாமியின் பக்கத்தை முடக்க வேண்டும்!

டுவிட்டரில் மட்டும் வீரத்தை காட்டும் சு.சாமியின் பக்கத்தை முடக்க வேண்டும்!

TOI Contributor 23 Feb 2017, 7:18 pm
தமிழர்களை மரியாதை குறைவாத பேசிவரும் “பொறுக்கி” புகழ் சுப்ரமணிய சாமியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil complaint filed against subramanian samy to freeze his twitter account
டுவிட்டரில் மட்டும் வீரத்தை காட்டும் சு.சாமியின் பக்கத்தை முடக்க வேண்டும்!


மத வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சாமி தொடர்ந்து பேசிவருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கிகள் என்று விமர்சனம் செய்த சுப்ரமணிய சாமி தொடர்ந்து பொறுக்கி என்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்திய டுவிட்டர் பதிவில் கூட தமிழர்களை பொறுக்கிகள் என்று குறிப்பிட்ட சாமி, ராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ் ஏஜெண்ட்டுகள் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர் என்றும் தமிழர்கள் தான் அவர்களின் இலக்கு என்றும் பதிவிட்டுருந்தார்.

சுப்ரமணிய சாமியின் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து சுப்ரமணிய சாமியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். டுவிட்டரில் மட்டுமே தன் வீரத்தை காட்டும் சுப்ரமணிய சாமி, தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவை பார்க்க ஆளுநர் மாளிகைக்கு பின்வாசல் வழியாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி