ஆப்நகரம்

சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு!

சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு!

Samayam Tamil 15 Feb 2017, 1:03 pm
அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil complaint registered against sasikala and edappadi palanisamy
சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு!


தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவருகிறது. அதிமுக கட்சி சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்திருந்தார். அங்கிருந்து மாறு வேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் கூவத்தூர் காவல் நிலையத்தில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் அளித்ததை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி தனியார் விடுதியில் சசிகலா அடைத்து வைத்திருந்தார் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமியும் உடந்தை என சரவணன் காவல்துறையிடம் புகார் அளித்தார். கூவத்தூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி