ஆப்நகரம்

ஜெ. நினைவு மண்டபம்: பணம் தராமல் கமிஷன் கேட்கும் பொதுப் பணித்துறை!

ஜெயலலிதா நினைவு மண்டப பணிகளுக்காக பொதுப்பணித் துறை பணம் கொடுக்காமல் கமிஷன் கேட்டு தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 1:29 pm
ஜெயலலிதா நினைவு மண்டப திறப்பு விழா தொடர்பான பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் நினைவிடம் கட்ட மணல் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தழுடிப்பதாக பொதுப் பணித்துறை மீது தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jayalaithaa memorial


இது தொடர்பாக அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கடற்கரை சாலையில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் அடக்கம் செய்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரமாண்ட நினைவிடம் பணி நடந்து முடிவுற்றது. நினைவு மண்டப திறப்பு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆனால் பணிகள் முடிந்தும் அரசின் பொதுப்பணித்துறை பணிகளுக்கான பணத்தை ஒப்பந்ததாரருக்கு வழங்காமல் கமிஷன் கேட்டு இழுத்தடிக்கிறது. இதுநாள்வரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனவே உடனடியாக நிலுவைப் பணத்தை வழங்க கோரியும் அதுவரையில் நினைவு மண்டப திறப்பு விழாவினை நிறுத்தி வைக்குமாறு மேதகு ஆளுநர் அவர்களுக்கு மனு வழங்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் சசிகலா விடுதலை தள்ளிப் போகுமா? வெளியான முக்கிய தகவல்!

சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதா நினைவு மண்டபத் திறப்பு விழாவை நடத்துவது அரசியல் நோக்கம் இருக்கிறதா என பேசப்பட்டு வரும் நிலையில் கட்டிடப் பணிகளுக்கு பணம் கொடுக்காமல் பொதுப் பணித்துறை இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி