ஆப்நகரம்

ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்கக் காரணமான ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

TOI Contributor 12 Aug 2016, 1:28 pm
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்கக் காரணமான ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
Samayam Tamil condition bail for audi car aiswarya
ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்


சென்னை தரமணி அருகே கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி காரில் வேகமாக சென்ற ஐஸ்வர்யா, சாலையை கடந்து கொண்டு இருந்த முனுசாமி என்பவர்மீது காரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஐஸ்வர்யா மீது கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா தரப்பில் ‌தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜி. சொக்கலிங்கம் இன்று தீர்ப்பு அளிப்பதாக கூறி இருந்தார்.

இன்று நீதிபதி ஜி.சொக்கலிங்கம் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி