ஆப்நகரம்

பணம் மழையில் தேர்தல் நடத்தி பயனில்லை? தமிழிசை ஆவேசம்

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடக்கும் நிலையில் தேர்தல் நடத்தி பயனில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

TNN 17 Dec 2017, 12:51 pm
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடக்கும் நிலையில் தேர்தல் நடத்தி பயனில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil conducting election has no means says tamilisai
பணம் மழையில் தேர்தல் நடத்தி பயனில்லை? தமிழிசை ஆவேசம்


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த ஆண்டும் பணப்பட்டுவாடா சூடுபிடித்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் ஆளுங்கட்சி சார்பில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “தேர்தலை ஜனநாயக முறைப்படி நேர்மையாக சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஆர்.கே.நகரில் கட்சிகள் போட்டிபோட்டு பணப்பட்டுவாடா செய்கின்றன. தேர்தல் ஆணையம் எங்கள் புகார்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை பற்றி ஆராயுங்கள். தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமானால் நடத்துங்கள். இல்லை என்றால் தேர்தலை நடத்தி பயனில்லை” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி