ஆப்நகரம்

மகளின் காதலனை கொன்ற தந்தை : பரபரப்பு வாக்குமூலம்

மகளின் காதலனை கொன்ற தந்தை : பரபரப்பு வாக்குமூலம்

TOI Contributor 7 Oct 2016, 3:25 am
நெல்லை : மகள் காதலித்த நபரை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை கொலை குறித்து பரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி. இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு திண்டுக்கலில் வேலைபார்த்து வருகிறார். அப்போது திண்டுக்கல், நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த விஷயம் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணனுக்கு தெரியவந்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமணன், பின்னர் சம்மதித்துள்ளார்.
Samayam Tamil confession of a man who killed his daughters lover in tirunelveli
மகளின் காதலனை கொன்ற தந்தை : பரபரப்பு வாக்குமூலம்


இதையடுத்து திருமண விஷயம் பேசுவதற்காக சிவகுருநாதனை கஸ்தூரியின் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பி வந்த சிவகுருநாதனை, லெட்சுமணன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி வீழ்த்தினார். அதன் பின்னர் லெட்சுமண பெருமாள் அரிவாளுடன் சங்கரன் கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து லெட்சுமண பெருமாள் காவல் நிலையத்தில் கொலை குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், “மாற்றுத்திறனாளியான என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என் மனைவி தான் பீடி சுற்றி சம்பாதிக்கிறார். மகன் நாகர் கோவிலில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். மகளை ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து, வேலை வாங்கி கொடுத்தேன். எனது மகள் வேற்று சாதி பையனை காதலிப்பதாக சொன்னபோது கண்டித்து இனி பேசக்கூடாது என்று எச்சரித்தேன். ஆனால் தொடர்ந்து இருவரும் பேசி வந்தனர். பின்னர் கஸ்தூரி காதலிக்கும் பையன் வீடு தேடி வந்து பெண் கேட்டது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டிற்கு போக சொன்னதற்கு தொடர்ந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார். அதனால் அவரை வெட்டிக்கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக லட்சுமண பெருமாள் மனைவி வேலுத்தாய், உறவினர் வெள்ளத்துரை ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி