ஆப்நகரம்

சென்னையில் தயாரிக்கப்பட்ட தரமற்ற வெண்ணெய் மற்றும் நெய் பறிமுதல்.! உஷார் மக்களே

சென்னை அருகே தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட டன் கணக்கிலான நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத் துறை பறிமுதல் செய்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2019, 7:19 pm
சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும் நெய்யை அனைவரும் உணவில் சேர்த்து வருகிறோம். பால் பொருட்கள் எதுவாகினும் அதில் கலப்படம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதையே விரும்புவோம். இந்நிலையில் ஊத்துக்குளி வெண்ணெய் என்ற பெயரில் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வந்த நெய் மற்றும் வெண்ணெய் குடோன் உணவு பாதுகாப்புத் துறைக்குத் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil 6


சென்னை சைதாப்பேட்டையில் தான் இந்த குற்றச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குச் செயல்பட்டு வரும் பால் பொருட்கள் உற்பத்தி குடோனில், ஊத்துக்குளி வெண்ணெய் என்ற பெயரில் போலியாக வெண்ணெய் தயாரிக்கப்பட்டு கோவில்கள் மற்றும் கடைகளில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் சைதாப்பேட்டை பகுதியில் வெண்ணெய் உற்பத்தி செய்து வந்த வீடுகள் மற்றும் குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 3 டன் நெய் மற்றும் வெண்ணெயை பறிமுதல் செய்து தஞ்சையில் உள்ள ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பரிசோதனை முடிந்து அதன் ஆய்வுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட 3 டன் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவை கலப்படமான தாவர கொழுப்பு மற்றும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இதனால் தரமற்ற முறையில் உணவுப் பொருட்களைத் தயாரித்த குற்றத்திற்காக நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி