ஆப்நகரம்

தேர்தலில் அதிமுகவுக்கு முன்னிலை தந்த மக்களின் முடிவை ஏற்கிறோம்: திருநாவுக்கரசர்

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு முன்னிலை தந்த மக்களின் முடிவை ஏற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TNN 22 Nov 2016, 12:00 pm
சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு முன்னிலை தந்த மக்களின் முடிவை ஏற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil congress acccept the people decision in bypoll count says thirunavukarasar
தேர்தலில் அதிமுகவுக்கு முன்னிலை தந்த மக்களின் முடிவை ஏற்கிறோம்: திருநாவுக்கரசர்


தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும், கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலும் தொடக்கம் முதலே அதிமுக முன்னிலை பெற்றது.

இதில் தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். அரவக்குறிச்சியில் 6வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 9,168 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் 10 சுற்றுகள் முடிவில் 51,309 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் அதிமுகவிற்கு முன்னிலை தந்த மக்களின் முடிவை ஏற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Congress acccept the people decision in bypoll count says Thirunavukarasar.

அடுத்த செய்தி