ஆப்நகரம்

தி.மு.க. கூட்டணிக்கு கமல் வரவேண்டும் – காங்கிரஸ் தலைவா் அழைப்பு

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிாி அழைப்பு விடுத்துள்ளாா்.

Samayam Tamil 9 Feb 2019, 5:27 am
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்திருந்த நிலையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் என்று கே.எஸ்.அழகிாி அழைப்பு விடுத்துள்ளாா்.
Samayam Tamil Kamal 1


மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் கூறுகையில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தொிவித்தாா். மேலும் தனியாா் தொலைக்காட்சிக்க அளித்த பேட்டியில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள் தான் என்று தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிாி செய்தியாளா்களிடம் பேசுகையில், “நாட்டின் இறையாண்மையையும், மதச்சாா்பின்மையையும் காப்பாற்றுவது தான் எங்கள் கூட்டணியின் முதன்மையான நோக்கம்.

இதற்காக மதச்சாா்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணியில் உள்ள ஒருசில கட்சிகள் மகத்தான சாதனைகளை செய்துள்ளன. அதே போன்று ஒரு சில தவறுகளையும் கட்சிகள் செய்திருக்கலாம். அவற்றை பாா்க்க வேண்டிய நேரம் இது கிடையாது. கமல்ஹாசன் எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எங்களோடு சோ்ந்து மதச்சாா்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி