ஆப்நகரம்

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்பார்... சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி.!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவிற்கு தலைமை ஏற்பார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Jul 2020, 3:16 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அனேகமாக அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் என்றும் ஒரு தகவல் அண்மைகாலமாக காட்டுத் தீயாக பரவி வருகிறது.
Samayam Tamil karti


அவ்வாறு அவர் வெளியே வந்தால், அதிமுகவுக்கு அவர் தலைமை ஏற்பார் என்றும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,,"சசிகலா சிறையில் இருந்து வெளியே வரமாட்டார் என்றும், கட்சியை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் செம்மையாக வழி நடத்தி வருகின்றனர்" என்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

'சசிகலா ரிலீஸ் இல்லை, வந்தாலும் பிரச்னை இல்லை'' வேற வேலைய பாருங்க... - அமைச்சர் தடாலடி

அமைச்சர் இந்த கருத்துக்கு நேர்மாறாக கார்த்தி சிதம்பரம் தற்போது கூறியுள்ள கருத்து, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு கார்த்தி சிதம்பரம் இன்று வருகை புரிந்தார்.

அங்கு புறவழிச்சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறும்போது, "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார்" என்று ரத்தின சுருக்கமாக கூறினார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

அடுத்த செய்தி