ஆப்நகரம்

Vaiko: இவ்வளவு ஆத்திரமா? அப்புறம் எதுக்கு கூட்டணி? சரமாரி கேள்வி கேட்ட கார்த்தி சிதம்பரம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காட்டமான கருத்துகளை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார்.

Samayam Tamil 13 Aug 2019, 2:54 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Karti Chidambaram


இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, வைகோ காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, காஷ்மீர் விவகாரத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சி தான்.

Also Read: இவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர் பழனிசாமி!

ஏன் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை. ஈழத் தமிழர்கள் படுகொலைக்கும் காங்கிரஸ் தான் காரணம். இந்த தவற்றை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் தங்கள் கண்டனப் பதிவுகளை முன்வைத்தனர். அதாவது, வரலாறு தெரியாமல் வைகோ பேசுகிறார்.

Also Read: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதிலேயே அதிக முக்கியத்துவம் காட்டியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை நடிகர் ரஜினி வரவேற்று பேசியுள்ளார்.

Also Read: நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு!

முதலில் நீட் தேர்வு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் போன்றவற்றில் கருத்து தெரிவிக்கட்டும். வைகோ ஏன் இப்படி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்? எங்கள் கட்சியின் மீது கடும் கோபம் கொண்டுள்ளார்.

அப்படி இருக்கையில் ஏன் கூட்டணி என்ற பெயரில் ஒட்டி கொண்டிருக்க வேண்டும். ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்ற பெயர் பெற்ற ப.சிதம்பரத்தை, முதலமைச்சர் இப்படி பூமிக்கு பாரம் என்று கூறலாமா? இது அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி