ஆப்நகரம்

கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!

ராஜினாமா செய்த காங்கிரஸ் மாவட்டத் தலைவருக்கு எதிராக நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 19 Nov 2022, 4:05 pm
பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Samayam Tamil kovilpatti


காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் கட்சியில் மற்றொரு தரப்பு நிர்வாகிகள் மாநில தலைவர் பற்றி குறை சொல்லியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் எந்தெந்த பகுதிகளில் எப்போது மழை? வெதர்மேன் கொடுத்த விளக்கம்!

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஸ்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, “உள்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்றது. பதவியை ராஜினாமா செய்த வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் தேர்தல் அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை, மேலும் கட்சிக்கு ஒரு உறுப்பினரை கூட அவர் சேர்க்கவில்லை. காமராஜ் ராஜினாமா உள்நோக்கம் கொண்டது. அவர் கட்சி மாற போவதாக தெரிவதால் கட்சி தலைமைக்கு எதிராக பேசியுள்ளார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - ஸ்டாலின் தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி
அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஆர்.எஸ். பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ரமேஷ்மூர்த்தி, கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வடக்கு மாவட்ட சேவதள தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி