ஆப்நகரம்

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: கொங்கு மண்டலத்தில் விசிட்!

கோவை, திருப்பூர் பகுதிகளில் மூன்று நாள்கள் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

Samayam Tamil 17 Jan 2021, 7:02 am
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேசிய கட்சிகளின் டெல்லி தலைமைகள் தமிழகத்துக்கு அடிக்கடி விசிட் அடித்து வருகின்றனர்.
Samayam Tamil rahul gandhi tn visit


அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமித் ஷா வந்ததும், துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜே.பி.நட்டா வந்ததும் தேர்தலை மனதில் கொண்டேதான் எனக் கூறுகிறார்கள். அதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்திருந்தார்.

தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற விசிட்கள் அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். ஜனவரி 23ஆம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சசிகலா மீதான விமர்சனம்: லேட்டாக பொங்கிய டிடிவி தினகரன்
இதற்காக டெல்லியிலிருந்து 23ஆம் தேதி காலை ராகுல் காந்தி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவை சிட்ரா பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். இ்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

பின்னர் அவர், கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள் நெசவாளர்களை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்தித்து பேசுகிறார். அப்போது தற்போதைய தொழில்துறையின் நிலை, அதை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுகிறார்.
தமிழ்நாட்டில் இனி ஒருவாரம் இப்படித்தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்!
அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார். கோவை பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பூருக்கு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தொழில் அதிபர்கள், தொழிலாளர்களையும் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு அவர், தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். கூட்டணிக் கட்சியினரை சந்திப்பது தொடர்பாக இதுவரை தகவல்கள் வரவில்லை.

அடுத்த செய்தி