ஆப்நகரம்

விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க முயலும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை

இந்தியாவிலுள்ள விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்கவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 27 Feb 2016, 12:12 pm
சென்னை : இந்தியாவிலுள்ள விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்கவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil congress warns of agitation if government taxes agriculture
விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க முயலும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை


இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் , பா.ஜ.க. ஆட்சியில் நாடு முழுவதிலும் உள்ள் விவசாயிகள் கடன் சுமையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவாதாக தெரிவித்துள்ளார்.இதனை போக்குகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகள் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பா.ஜ.க. அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்க முனையுமேயானால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி