ஆப்நகரம்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

காவிரி விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 22 Oct 2016, 3:24 pm
காவிரி விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil congress will take part in all party meet thirunavukkarasar
அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு


காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அடுத்தபடியாக செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது பற்றி, விவாதிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள இக்கூட்டத்தில், பங்கேற்கும்படி, பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களுக்கு கடிதம் மூலமாக, அழைப்பு அனுப்பியுள்ளதாக, மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதன்படி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று, அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திமுக.,வின் கூட்டணியில் இருந்தாலும், சமீபகாலமாக சில முரண்பாடுகளை காங்கிரஸ் வெளிப்படுத்தி வருகிறது.

எனினும், வரும் 25ம் தேதி திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தமிழக மக்களின் நலன் மற்றும் விவசாயிகள் உரிமை தொடர்புடையது என்பதால், காங்கிரஸ் கட்சி அதில் பங்கேற்று, ஆலோசனை தெரிவிக்கும் என்றும், திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Cauvery Issue:

Tamilnadu Congress Committee will take part in All party meeting to be conducted by DMK on Oct 25th.

அடுத்த செய்தி