ஆப்நகரம்

பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை பாதுகாக்க புகைப்படப் போட்டி: நீங்களும் பங்குபெறலாம்

சென்னை, பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை காப்பதற்காக புகைப்படப் போட்டியை தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2019, 11:14 am
சென்னை, பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை காப்பதற்காக புகைப்படப் போட்டியை தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil TH-SOIL_TESTING


தொழில்நுட்ப வளர்ச்சியாலும், தொடர் ஆக்கரமிப்புகளாலும் சென்னையில் உள்ளபள்ளிக்கரனை சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை அழிவில் இருந்து காப்பதற்காகதமிழ்நாடு வனத்துறை புகைப்பட போட்டிகளை அறிவித்துள்ளது.இந்த போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை பற்றி தாங்கள் எடுத்த புகைப்படங்களை மாநகர வனத்துறை அதிகாரி சுப்பையாவின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்,(dfoufd@yahoo.in). வருகின்ற 28ஆம் தேதிவரை புகைப்படங்களை அனுப்பலாம்.

இதிலிருந்து மூன்று சிறந்த புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு பரிசுகள் வழங்கப்படும். அதேபோல் அந்த புகைப்படங்கள் தொடர்பானசெய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

அடுத்த செய்தி