சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கில் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன் , காவலர் முருகன் மூவரை கைது செய்ததையடுத்து நீதிமன்றம் அவர்களை 15 நாள் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கின் முதற்கட்ட தகவல் அறிக்கையில் 5 பேருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 4 பேரை உடனடியாக விசாரித்து கைது செய்துள்ள சிபிசிஐடி நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வழக்கில் எஞ்சியுள்ள காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். அவரையும் விரைவில் பிடிப்போம் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். ஐஜி சங்கர் பேட்டி "முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம்.
தலைமறவாகியுள்ள முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம்.
10 நாளில் 12 யானைகள் மரணம்... என்ன செய்கிறார் வனத்துறை அமைச்சர் : விளாசும் தங்கம் தென்னரசு
சில கேமரா காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல. தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது" என இவ்வாறு கூறினார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கின் முதற்கட்ட தகவல் அறிக்கையில் 5 பேருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 4 பேரை உடனடியாக விசாரித்து கைது செய்துள்ள சிபிசிஐடி நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வழக்கில் எஞ்சியுள்ள காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். அவரையும் விரைவில் பிடிப்போம் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். ஐஜி சங்கர் பேட்டி "முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம்.
தலைமறவாகியுள்ள முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம்.
10 நாளில் 12 யானைகள் மரணம்... என்ன செய்கிறார் வனத்துறை அமைச்சர் : விளாசும் தங்கம் தென்னரசு
சில கேமரா காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல. தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது" என இவ்வாறு கூறினார்.