உடுமலையில், கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வசித்து வந்த செல்வகுமார் (25) உட்பட 10க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சாலையில் ஜாஹிர்உசேன் என்பவர் புதியதாக கட்டிவரும் கடைக்கு மேல் கான்ரிக்ட் போடுவதற்காக வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்த கட்டிடப்பணிகளுக்காக கட்டிட உரிமையாளர் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, உரிய பாதுகாப்பு இல்லாமல், அமைக்கப்பட்டிருந்த மின்ஒயர் மீது, கான்கிரீட் இயந்திரம் மோதி, செல்வக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
மோடி ஜீ-க்கு நன்றி! கடைசி ட்வீட் போட்ட சுஷ்மா ஸ்வராஜ்!
அவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வக்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்தும் கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கட்டிட வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்த தருவாயில் மின்சார ஓயர்களை முறையாக பராமரிக்கமால் அலட்சியாக விட்டதால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியபோது தவறிவிழுந்த தொழிலாளர் உயிரிழப்பு!
எனவே, கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்து போன செல்வகுமாரின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு கோவை-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்ததது
இந்த போராட்டத்தால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. உயிரிழந்த செல்வகுமாருக்கு திருமணமாகி மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனர்.
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வசித்து வந்த செல்வகுமார் (25) உட்பட 10க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சாலையில் ஜாஹிர்உசேன் என்பவர் புதியதாக கட்டிவரும் கடைக்கு மேல் கான்ரிக்ட் போடுவதற்காக வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்த கட்டிடப்பணிகளுக்காக கட்டிட உரிமையாளர் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, உரிய பாதுகாப்பு இல்லாமல், அமைக்கப்பட்டிருந்த மின்ஒயர் மீது, கான்கிரீட் இயந்திரம் மோதி, செல்வக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
மோடி ஜீ-க்கு நன்றி! கடைசி ட்வீட் போட்ட சுஷ்மா ஸ்வராஜ்!
அவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வக்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்தும் கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கட்டிட வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்த தருவாயில் மின்சார ஓயர்களை முறையாக பராமரிக்கமால் அலட்சியாக விட்டதால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியபோது தவறிவிழுந்த தொழிலாளர் உயிரிழப்பு!
எனவே, கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்து போன செல்வகுமாரின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு கோவை-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்ததது
இந்த போராட்டத்தால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. உயிரிழந்த செல்வகுமாருக்கு திருமணமாகி மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனர்.
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்!!