ஆப்நகரம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை!

டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Samayam Tamil 27 Jul 2021, 9:31 am
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அந்தப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn local body election


பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது.
ரெய்டுக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி? அலறும் அதிமுக மாஜி அமைச்சர்கள்!
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அமைச்சர் கே.என்.நேரு, “டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதை தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் மழை காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் தொடங்கும்” என்று கூறியிருந்தார்.
மனம் மாறுகிறாரா எடப்பாடி? சசிகலாவுக்கு டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல்?
டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி