ஆப்நகரம்

சென்னை: உயர் கல்வித்துறை தொடர்பாக முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 26 Sep 2019, 2:17 pm
பகவத் கீதை சர்ச்சையை அடுத்து நடைபெற்று வரும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இத சம்மந்தமான சாத்திய கூறுகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil 2


பகவத் கீதை போன்றவற்றை பாடத்தில் சேர்த்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை, பொறியியல் படிப்பினை மதிப்பிழக்கச் செய்யும் என ஆசிரியர், மாணவர், எழுத்தாளர் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உயர்கல்வித்துறை சார்பாக அமைச்சர் கே.பி. அன்பழகன், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது குறித்தும் பகவத் கீதை சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி