ஆப்நகரம்

கண்டெயினர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு அனுமதி

திருப்பூர் அருகே கண்டெயினர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Jul 2016, 11:23 am
சென்னை: திருப்பூர் அருகே கண்டெயினர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil container case chennai hc orders for cbi probe
கண்டெயினர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு அனுமதி


தமிழக சட்டப்பேரவை நடைபெற்ற தருணத்தில், திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர், இந்த பணத்திற்கு ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. தொடர்ந்து, உரிமை கோரிய ஹைதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு, அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது.

பல மர்மங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதீமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவிற்கு சிபிஐ தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. அதில், ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளுக்கு இடையே நடந்த பரிவர்த்தனை ஆகும். இந்த பண பரிவர்த்தனையில் சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை. சிபிஐ வசம் குறைவான அதிகாரிகளே உள்ளனர். மேலும், சிபிஐ விசாரிக்கும் அளவிற்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த செய்தி