தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கட்டண வரையறை குழுவுக்கு தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின்னர் அந்த காலிப்பணியிடம் தமிழக அரசினால் நிரப்பப்படவில்லை.
இதன் காரணமாக 2016-17 கல்வியாண்டில் தமிழக தனியார் பள்ளிகள் அதிக பள்ளிக் கட்டணத்தை வசூலித்ததாகவும்,எனவே உடனடியாக தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுத் தலைவர் பொறுப்பிற்கு ஆள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு,புதிய தலைவரை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்ததாகவும்,ஆனால் மாநிலத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களால்(ஜெயலலிதா மறைவு) அதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு வாரத்திற்குள் புதிய தலைவரை நியமிக்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால் தற்போது வரை அந்த காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனைத் தொடர்ந்து கார்த்தி என்பவர் பள்ளிக்கல்வித்துறை மீது,மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர்,பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த சவீதா இடமாற்றம் செய்யப்பட்டு,தற்போது அந்த இடத்தில் உதயச்சந்திரன் புதிதாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும்,எனவே கூடிய விரைவில் அந்த காலிப்பணியிடத்தை நிரப்பி விடுவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்,அடுத்த வழக்கு விசாரணைக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
Contempt plea filed in Madras HC against TN school education officials
தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கட்டண வரையறை குழுவுக்கு தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின்னர் அந்த காலிப்பணியிடம் தமிழக அரசினால் நிரப்பப்படவில்லை.
இதன் காரணமாக 2016-17 கல்வியாண்டில் தமிழக தனியார் பள்ளிகள் அதிக பள்ளிக் கட்டணத்தை வசூலித்ததாகவும்,எனவே உடனடியாக தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுத் தலைவர் பொறுப்பிற்கு ஆள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு,புதிய தலைவரை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்ததாகவும்,ஆனால் மாநிலத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களால்(ஜெயலலிதா மறைவு) அதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு வாரத்திற்குள் புதிய தலைவரை நியமிக்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால் தற்போது வரை அந்த காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனைத் தொடர்ந்து கார்த்தி என்பவர் பள்ளிக்கல்வித்துறை மீது,மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர்,பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த சவீதா இடமாற்றம் செய்யப்பட்டு,தற்போது அந்த இடத்தில் உதயச்சந்திரன் புதிதாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும்,எனவே கூடிய விரைவில் அந்த காலிப்பணியிடத்தை நிரப்பி விடுவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்,அடுத்த வழக்கு விசாரணைக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
Contempt plea filed in Madras HC against TN school education officials