ஆப்நகரம்

வெள்ள நீரால் முடங்கிய முடிச்சூர்... தொடரும் கனமழையால் மக்கள் அவதி...

தொடர் மழை காரணமாக தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையின் காரணமாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு விரைகின்றனர்.

Samayam Tamil 2 Dec 2019, 3:33 pm
தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் மிதமான மழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil மழை நீரால் முடங்கிய முடிச்சூர்... தொடரும் கனமழையால் மக்கள் அவதி...


தமிழக அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

சென்னை புறநகரங்களில் கடந்த 3 நாட்களில் பெய்த தொடர் மழையால் முடிச்சூர் பகுதியில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், வரதாஜபுரம் ஆகிய தாழ்வான பகுதிகளில் பெரிய கன மழைக்கு பிறகு வெள்ளநீர் தேங்குவது வழக்கம். ஆனால் 3 நாட்களிலேயே அப்பகுதியில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருப்பது அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.

சிலை கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்.! - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இதனால் குடியிருப்பில் வசித்து வரும் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி செல்கின்றனர். இதற்காக காற்று நிரப்பப்பட்ட டியூப் மூலம் படகு செய்யப்பட்டு அதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அமரவைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை அப்பகுதி இளைஞர்களே செய்து வருகின்றனர்.

நாளைக்கும் மிக கனமழை: எந்தெந்தப் பகுதிகளுக்கு தெரியுமா?

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கனமழை பொறுத்தவரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி