ஆப்நகரம்

பிப்.12ம் தேதி திருநாவுக்கரசு ஊரிலேயே இல்லை? திசை மாறும் பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிப்ரவரி 12ம் தேதி நான் பொள்ளாச்சியிலேயே இல்லை என்று திருநாவுக்குரசு சிபிசிஐடி அதிகாாிகளிடம் தொிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 21 Mar 2019, 10:32 pm
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடா்பும் கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Mayura Jayakumar


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு வாக்குமூலம் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் செயாதியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசு சிபிசிஐடி காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் பிப்ரவரி 12 ம் தேதி கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்ததாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக பதவியேற்ற பின் கோவை வந்த அன்று, கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் திருநாவுக்கரசு யார் என்றே தெரியாது எனவும், நேரடியாகவோ, தொலைபேசியிலோ எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறிய அவர், சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராகி எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்தாக தெரிவித்தார்.

பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் திருநாவுக்கரசு வந்ததாக கூறியுள்ளதால், திருநாவுக்கரசு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தாரா, இல்லையா என்பதை மட்டுமே சிபிசிஐடியினர் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். சம்மன் அனுப்பபட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல எனவும், தான் சாட்சி மட்டுமே எனவும் அவர் கூறினார்.

இதுதொடராபாக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும், இவ்வழக்கில் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை எனவும் அவர் கூறினார். மேலும் திருநாவுக்கரசு எந்த இடத்திலும் தனக்கு தொடர்பிருப்பதாக சொல்லவில்லை எனவும், திருநாவுக்கரசை காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனவும் கூறிய அவர், திருநாவுக்கரசிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

திருநாவுக்கரசை கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் திருநாவுக்கரசு மயூரா ஜெயக்குமாரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

பிப்ரவரி 12 ம் தேதி திருநாவுக்கரசு கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார் எனவும், திருநாவுக்கரசுடன் தங்களுக்கு எந்த பழக்கமும் இல்லை என கூறிய அவர், திருநாவுக்கரசை மயூரா ஜெயக்குமாருக்கு யார் என்றே தெரியாது என தெரிவித்தார்.

அடுத்த செய்தி