கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் தனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் எல்ஐசி பணம் மாயமானதால் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன் என்பவரது இளைய மகன் சோமசுந்தரம் உடல் நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தார். சோமசுந்தரத்தின் பெயரில் போச்சம்பள்ளி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் எல்.ஐ.சி. பணம் 2 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், சீனிவாசன் கடந்த வாரம் பணம் எடுக்கச் சென்றபோது கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டது தெரியவந்தது. மும்பையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரை ஏற்க மறுத்த போலீசார், சைபர் கிரைம் போலீசாரிடம் செல்லுமாறு கூறினர். இதனால், சீனிவாசன் செய்வதறியாமல் திகைத்துவருகிறார்
கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன் என்பவரது இளைய மகன் சோமசுந்தரம் உடல் நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தார். சோமசுந்தரத்தின் பெயரில் போச்சம்பள்ளி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் எல்.ஐ.சி. பணம் 2 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், சீனிவாசன் கடந்த வாரம் பணம் எடுக்கச் சென்றபோது கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டது தெரியவந்தது. மும்பையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரை ஏற்க மறுத்த போலீசார், சைபர் கிரைம் போலீசாரிடம் செல்லுமாறு கூறினர். இதனால், சீனிவாசன் செய்வதறியாமல் திகைத்துவருகிறார்