ஆப்நகரம்

திருவிழா நடத்த அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் அறிவிப்பு!

திருவிழா நடத்த காவல்துறை தடுப்பதால் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கவுள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, கோவிலின் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 20 Jul 2019, 5:01 pm
பேரணாம்பட்டு அருகே திருவிழா நடத்த வருவாய்த்துறை அனுமதியளித்தும் காவல்துறை தடுப்பதால் வேலூர் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் எச்சரித்துள்ளனர்.
Samayam Tamil திருவிழா நடத்த அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் அறிவிப்பு!
திருவிழா நடத்த அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் அறிவிப்பு!


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கெங்கையம்மன் திருவிழா ஒற்றுமையுடன் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கு முன்னர் இரு சமூகத்தினர், இரு தரப்பினராக பிரிந்ததால் திருவிழா நடத்துவதில் பிரச்சணை ஏற்பட்டது.

இதையடுத்து ஓராண்டாக திருவிழா நிறுத்தப்பட்டு, இருசமுதாய மக்களும் தனித்தனியாக திருவிழாவை நடத்திகொள்ளலாம் என ஒப்புகொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு இரு சமுதாய மக்களும் தனித்தனியாக திருவிழாவை நடத்தினார்கள்.

இந்த ஆண்டும் அதே போல் நடத்த முயன்ற போது வருவாய்த்துறை திருவிழா நடத்த அனுமதியளித்து பின்னரும் காவல்துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த கூடாது. மீறினால் குண்டர் தடுப்பு சட்டத்திலும் பல்வேறு வழக்குகளை போட்டு உள்ளே அனுப்புவேன் என மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், கோவில் மற்றும் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். மேலும் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கவுள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, கோவிலின் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது குடியாத்தம் டிஎஸ்பி சரவணணை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கிராம மக்கள் கருப்பு கொடியை அகற்ற மறுத்ததுடன் தேர்தல் புறக்கணிப்பில் உறுதியாக உள்ளனர். எனவே அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த செய்தி