ஆப்நகரம்

பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் கைது!

திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை-ஐ பாலியல் ரீதியாக தொல்லை செய்து மிரட்டிய இரண்டு பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 24 Sep 2018, 1:15 pm
திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை-ஐ பாலியல் ரீதியாக தொல்லை செய்து மிரட்டிய இரண்டு பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil AAA


ராஜா என்பவர்திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியையுடன் முகநூலில் நண்பராகி உள்ளார். ராஜா திருமணமான போதிலும் அதை மறைத்து அவர் கல்லூரி ஆசிரியையிடம் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவருடன் பேசுவதை ராஜா நிறுத்திவிட்டார்.

இதையடுத்து ராஜா அவர் நண்பர் ஜொ. ஸ்டாலினிடம்நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையறிந்த ஜொ. ஸ்டாலின் முகநூலில் அந்த ஆசிரியிடம் பேசி மிரட்டியுள்ளார். ராஜவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஜொ. ஸ்டாலின் ஆசிரியையிடம் இருந்துரூ. 1 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த கல்லூரி ஆசிரியை காவல்துறையிடம்புகார் அளித்துள்ளர்.இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி