ஆப்நகரம்

தஞ்சையில் கொரோனா பாதித்த பெண் மருத்துவர் பலி..!

தஞ்சையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகப்பேறு பெண் மருத்துவர் உயிரிழந்தார் .

Samayam Tamil 6 Jul 2020, 4:46 pm
தஞ்சாவூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 4280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil file pic


அதன்படி, பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன் களப்பணியாளர்களாக இருந்து வரும் மருத்துவர்கள், காவலர்கள் கொரோனா பாதிப்புக்குளாகி வருவது அவர்களது குடும்பத்தினரிடையியே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தஞ்சையில் மீண்டும் ஒரு பெண் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

குப்பை தொட்டியில் அலட்சியமாக கொட்டப்படும் கொரோனா கழிவுகள்

கும்பகோணத்தைச் சேர்ந்த 75 வயதான மகப்பேறு மருத்துவர் கொரோனா தொற்று பாதிப்பினால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிக்காமல் அவர் மருத்துவமனையிலேயே இறந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி