ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று 48 பேர் பலி..! 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்தை கடந்துள்ளது.

Samayam Tamil 17 Jun 2020, 6:46 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து நாள்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 2174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona cases in tamilnadu


சென்னையில் இன்று அதிகபட்சமாக, 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 35,556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும், 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமானவர்களின் எண்ணிக்கை 27,624 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 48 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,624 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலி..!

தமிழகத்தில் இன்றைய நாளில் கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 21,990 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி