ஆப்நகரம்

கொரோனா: சென்னை,கோவை உட்பட அனைத்து மாவட்டங்களின் நிலவரத்தை தெரிந்துகொள்வோம்!

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Samayam Tamil 12 Sep 2020, 7:40 pm
தமிழகத்தில் இன்று மேலும் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil chennai corona


சென்னையில் இன்று மேலும் 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தோடு சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10645 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்த கோவையில் 428 பேர் இன்று மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவையில் தற்போது 3562 பேர் கொரோனாவால் சிகிச்சை பெயரு வருகின்றனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 441649 பேர் குணமாகியுள்ளனர். இன்று மேலும் 76 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி நைட் 10 மணிவரை பெட்ரோல் போடலாம்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 47,110 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி