ஆப்நகரம்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு..! போராடி வரும் சுகாதாரத்துறை..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2020, 6:31 pm
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22350 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 35979 பரிசோதனைகள் நடந்துள்ளன.
Samayam Tamil corona cases in tamil nadu


சென்னையில் இன்று அதிகபட்சமாக 1261 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21766 ஆக அதிகரித்துள்ளது. தமிழத்தில் இன்று 3051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமானோர்களின் மொத்த எண்ணிக்கை 74167 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.


அமைச்சர் சி.வி.சண்முகம் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்?

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும் தனிமைப்படுத்தப்பட்டும் 46480 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி